Sunday, March 4, 2012

இரவு வானம்.!!




இரவு வானில் விண்மீன்களையும் கோள்களையும் ராசிகளையும் கண்டு கழிக்க விரும்பும் நண்பர்களே! 

இரவு வானின் வரைபடத்தை வைத்து எப்படி அடையாளம் காண்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளபடியே கற்றுக்கொள்ளமுடியும்.

இரவில் வெளிச்சமோ தூசோ உயரமான மரங்களோ குன்றுகளோ இல்லாத தூய்மையான தனியான இடந்தான் அதற்குச் சரியான இடம்.

இல்லாவிட்டால் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றைக் காண முடியாது. 

அத்தகைய ஒரு இடத்தில் மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, வயல்வெளியாக இருந்தாலும் சரி கட்டிலில் அல்லது தரையில் வடக்குநோக்கித் தலையை வைத்துப் படுதுக்கொள்ளவேண்டும்.மேப்பை நமது முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டு டார்ச் விளக்கின் உதவியால் பார்த்து அதே வடிவத்தில் விண்ணில் தெரியும் காட்சியைச் சரியாகக் கண்டுபிடிக்கப் பழகவேண்டும். அது மிக எளிமையானதுதான்.

நின்றுகொண்டே பார்க்க விரும்பினால் தெற்குமுகமாக நின்றுகொண்டு வானை அண்ணாந்து பார்க்கவேண்டும் . 

பழகிவிட்டால் அதன் பின் மேப்பைப் பார்த்தாலே வானில் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் புரிந்து விடும்.

No comments:

Post a Comment