Wednesday, March 7, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 01.


மணத்தக்காளி.!



மணத்தக்காளி என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கீரை வகை (மூலிகை வகை) ஆகும்.  மணத்தக்காளி இலைகளை நன்றாக கழுவி விட்டு நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், குடல் புண், ஆகியவை தீரும். மேலும் அனைத்து வீடுகளிலும் இதை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வாரம் ஒரு முறையாவது உணவில் மணத்தக்காளி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். நாம் மணத்தக்காளி இலைகளை நேரடியாக கழுகி விட்டு உண்ணலாம்.

முடக்கறுத்தான்.!





முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம்.  இது மூட்டு வலி , முடக்கு வாதம் ,  கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.


வல்லாரை.!



வல்லாரை என்பது அனைவரும் அறிந்த , ஆனால் அதிகம் பேர் உபயோகபடுத்தாத அற்புதமான மூலிகை ஆகும். இதன் தாவரவியல் பெயர் centella asiatica ஆகும். இது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  கீரையாகவும் கட்டி விற்குமிடத்தில் கிடைக்கும். இதை சமைத்தும் உண்ணலாம். இதன் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொண்டு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் கொடுத்து வர ஞாபக சக்தி , அறிவு கூர்மை அதிகரிக்கும். நம்மிடையே கிடைக்கும் அற்புதமான மூலிகை , அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்..


No comments:

Post a Comment