Thursday, March 8, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 02.


இஞ்சி.!



இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் (ஒரு விரைகடை அளவு) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று பொருமல் ஆகியவை தீரும்.


அருகம்புல்.!





அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு கைப்பிடி எடுத்து பத்து மிளகாய் சேர்த்து நான்கு தம்ளர் நீரை ஊற்றி ஒரு தம்ளராக வற்ற வைத்து வடித்து இளம் சூட்டில் பனங் கல்கண்டு சேர்த்து தினம் இரு வேளை பருகி வர இரத்தம் சுத்தமாகும் . உடல் அரிப்பு வேர்வை நாத்தம் வெள்ளை ஆகியவை தீரும் .


அவுரி.!



அவுரி வேரபட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர் நீரை ஒரு டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை 
பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும். 

No comments:

Post a Comment