Wednesday, March 14, 2012

உடல் பருமன் குறைய வேண்டுமா?


தேவையான பொருட்கள்:
  1. முள்ளங்கி.
  2. தேன்.
செய்முறை:
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

Friday, March 9, 2012

பழைய சோறு.!




வெய்யில் காலம் துவங்கிவிட்டது. இனி ஆளுக்கு ஆள் பேச்சுத் துவங்குவதே வெயிலைப்பற்றித்தான் இருக்கும்.

மின்சாரமும் பழிவாங்குவதால் இந்தக் கோடை ஒரு சோதனையான காலமாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் வழக்கொழிந்து வருகிற பழையசோற்றின் சிறப்புப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அரிசி, கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சோற்றைக் கொண்டோ களியைக் கொண்டோ பழைய சோறு தயாரிக்கலாம்.

குறிப்பாக அரிசியும் கம்பும் சோளமும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

பழைய சோறு என்பது அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கபடுவது அல்ல. சூடாக உண்பதற்காகத் தயாரிக்கப்படும் சாதம் அல்லது களியை உண்டுவிட்டு மீதம் இருப்பது ஆறியபின்பு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டால் சுமார் ஆறுமணிநேரத்துக்குப் பின்னால் பழைய சோறு தயார். அதை மேலும் ஒரு நாள் வரை வைத்திருந்து போதுமான அளவு சோறும் அதிலுள்ள நீரும் சிறிது உப்பும் சேர்த்து பழைய சோற்றுக்கலவையை உண்பதற்குத் தயார் செய்துவிடலாம்.

பொதுவாகப் பழைய சோற்றைக் கையால் பிசைந்து கரைத்தால்தான் நன்கு கூழ்பாகத்தில் உண்பதற்கு நன்கு இருக்கும். கரண்டியால் கலக்கினால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பருக்கை பருக்கையாக இருக்கும். 

சமைப்பது மண் சட்டியாக இல்லாமல் வேறு பாத்திரமாக இருந்தாலும் அதைப் பழைய சோற்றுக்காக எடுத்துவைக்கும்போது மண் சட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றிவைப்பதுதான் சிறந்தது. காரணம் அது கூடுதல் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மண் சட்டி இல்லாவிட்டால் மற்ற பாத்திரங்களிலும் வைக்கலாம்.

பழைய சோற்றில் மோரோ தயிரோ கலந்துகொள்வது மேலும் சுவையை அதிகப்படுத்தும். அதனுடன் சின்னவெங்காயத்தை சின்னதாக நறுக்கிப் போட்டோ அல்லது நேரடியாய்க் கடித்துக்கொண்டோ பழைய சோறு சாப்பட்டால் இன்னும் சுவை கூடுதல் ஆகும். முன்பெல்லாம் பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டும் பழைய சோறு உண்பார்கள்.

பழைய சோறு தண்ணீர் ஊற்றிவைத்த ஆறில் இருந்து பன்னிரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் அதை முறைப்படி உப்பும் இருந்தால் மோரோ தயிரோ கலந்து கலக்கிக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் போதுமான நேரத்துக்குப்பின்னால் சாப்பிட்டால் அதன்சுவையை வர்ணிக்கவே முடியாது.

இது அந்தக்காலத்தில் ஏழை மக்களின் மலிவான உணவாகும். 

சமைத்த உணவைவிட இது கூடுதல் சத்துக்களைக் கொண்டது. எளிதில் செரிக்கக்கூடியது. இயற்கை உணவுக்கு நிகரானது. 

அந்தக் காலத்தில் கடுமையாக உழைக்கும் ஏழைகளும் உழைப்பாளிகளும் விவசாயிகளும் பழைய சோறுதான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதன் சிறப்பை நன்கு உணரலாம்!

அந்தக் காலத்தில் காலை உணவு உண்ணும் நேரத்தைப் பழைய சோத்து நேரம் என்றுதான் கிராமங்களில் சொல்வார்கள்.

பழைய சோற்று வகைகளிலேயே கம்புதான் மிகுந்த மணத்துடனும் சுவையுடனும் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் கம்மங்கூழ் பானைகளில் வைத்து தெருவோரங்களில் கூட விற்றபனை செய்யப்படுகிறது.

பழைய சோற்றில் உள்ள சிறப்புகளைத் தனிக் கட்டுரையில் விளக்குவதுதூன் சிறப்பாக இருக்கும். அது ஒருவகையில் மருத்துவகுணமும் இயற்கைத் தன்மையும் கொண்டதாக இருப்பதால் சமைக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த வகை உணவை விடவும் ஒப்பு நோக்கில் உடல் நலனுக்கு ஏற்றதும் மிகவும் செலவு குறைந்ததும் ஆகும்.

மற்ற உணவை உண்டால் தாகம் எடுக்கும். ஆனால் பழைய சோறு உண்டால் தாகத்தைப் போக்கும்.

பழைய சோற்றை மறக்கவேண்டாமே!

Thursday, March 8, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 02.


இஞ்சி.!



இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் (ஒரு விரைகடை அளவு) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று பொருமல் ஆகியவை தீரும்.


அருகம்புல்.!





அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு கைப்பிடி எடுத்து பத்து மிளகாய் சேர்த்து நான்கு தம்ளர் நீரை ஊற்றி ஒரு தம்ளராக வற்ற வைத்து வடித்து இளம் சூட்டில் பனங் கல்கண்டு சேர்த்து தினம் இரு வேளை பருகி வர இரத்தம் சுத்தமாகும் . உடல் அரிப்பு வேர்வை நாத்தம் வெள்ளை ஆகியவை தீரும் .


அவுரி.!



அவுரி வேரபட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர் நீரை ஒரு டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை 
பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும். 

Wednesday, March 7, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 01.


மணத்தக்காளி.!



மணத்தக்காளி என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கீரை வகை (மூலிகை வகை) ஆகும்.  மணத்தக்காளி இலைகளை நன்றாக கழுவி விட்டு நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், குடல் புண், ஆகியவை தீரும். மேலும் அனைத்து வீடுகளிலும் இதை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வாரம் ஒரு முறையாவது உணவில் மணத்தக்காளி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். நாம் மணத்தக்காளி இலைகளை நேரடியாக கழுகி விட்டு உண்ணலாம்.

முடக்கறுத்தான்.!





முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம்.  இது மூட்டு வலி , முடக்கு வாதம் ,  கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.


வல்லாரை.!



வல்லாரை என்பது அனைவரும் அறிந்த , ஆனால் அதிகம் பேர் உபயோகபடுத்தாத அற்புதமான மூலிகை ஆகும். இதன் தாவரவியல் பெயர் centella asiatica ஆகும். இது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  கீரையாகவும் கட்டி விற்குமிடத்தில் கிடைக்கும். இதை சமைத்தும் உண்ணலாம். இதன் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொண்டு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் கொடுத்து வர ஞாபக சக்தி , அறிவு கூர்மை அதிகரிக்கும். நம்மிடையே கிடைக்கும் அற்புதமான மூலிகை , அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்..


Tuesday, March 6, 2012

ஓணான்.!!



வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்வர்கள். அந்த அளவு கிராமத்து வேலிகளுக்கும் இந்த ஓணான்களுக்கும் அவ்வளவு நெருக்கம் ஆகும்.

ஓணான் பற்றிக் கிராமத்தில் உள்ளவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அனைவருக்கும் தெரியும். அவற்றில் பலவகைகள் உள்ளன. பச்சோந்தி என்பதுவும் ஒரு வகை ஓணான் என்று சொல்வார்கள்.

இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கிக்கொண்டு திரிவதைப்போல் அந்தக் கால கிராமச் சிறுவர்கள் இந்த ஓணான்களை வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்காகும். சரியாகக் குறிவைத்து அடிப்பதற்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.

முக்கியமாகக் கள்ளிகளில் தான் நிறைய ஓணான்களைப் பார்க்கமுடியும். இவற்றால் மனிதருக்கோ விவசாயப் பயிர்களுக்கோ பெரிய அளவு தீங்கு என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஆனால் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக எண்ணற்ற ஓணான்கள் பலியாகும். ஆனால் தற்காலத்தில் அப்படிப்பட்ட விளையாட்டு எந்தச் சிறுவர்களுக்கும் அனேகமாகத் தெரியாது. அதனால் ஓணான்களுக்குப் பாம்புகளைத்தவிர வேறு ஆபத்து ஒன்றுமில்லை.

ஆனால் அவற்றின் வாழ்விடங்களான வேலிகள் அழிக்கப்பட்டு வருவதால் கிராமப்புறங்களில்கூட அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஓணான்களுக்கு இரையாகின்ற பலவகைப் பூச்சி இனங்கள் அழிக்கப்படுவதும் ஓணான்கள் வாழ்வுக்குப் பெரும் சோதனை ஆகும்.