Saturday, March 3, 2012

பொன்வண்டு..!!




இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!.....

No comments:

Post a Comment